Monday 16 May 2016

12th Std Results 2016

On behalf of Local News paper of tamilnadu we are updating you all students that your TN HSC Result 2016 will declare on 17th May 2017 between 10:30 to 11:00 AM. Here

Friday 13 February 2015

7 சிறந்த பழக்கங்கள்

அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்தபோது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்!
அதையே &'The seven habits of highly effective people&' by Stephen R.Covey என்ற புத்தகமாக வடிவமைத்தார். அவர் கண்டறிந்த ஏழு பழக்கங்களும், எல்லோர்க்கும் மிக மிக எளிதானவை; புரிந்து கொள்ளக்கூடியவை; எல்லோரும், எல்லா வயதினரும் பின்பற்றக்கூடியவை!
  1. உன் செயலுக்கு, நீயே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள் : பிறரது எண்ணம், சொல், உணர்ச்சி, செயல் போன்றவற்றால் நீ தூண்டப்பட்டால், உடனடியாக, உணர்ச்சி வசப்பட்டு, எதிர்வினையைக் காட்டி அவதிப்படாதீர். சற்று சிந்தித்து, சுய பொறுப்புடன் செயல்பட்டால், நல்ல விளைவுகள் உண்டாகும்.
  2. இலக்கை மனதில் இருத்தி, பயணத்தைத் தொடங்கு: அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் பதித்து,’கருமமே கண்ணாயினாராய்’ செயல்பட்டால், பயணம் வெற்றிப் பாதையில், உறுதியாய்ச் செல்லும். 
  3. முதன்மையானவற்றை முந்திச் செய் : செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, முக்கியமானவற்றை அவசரமின்றி, முனைப்புடன் முதலில் செய்தால், கால நிர்வாகம் கையில் இருக்கும், வெற்றி வீட்டு வாயிலில் நிற்கும்!
  4. நீ மட்டுமின்றி, பிறரும் வெற்றி பெற நினை: உங்களது நலனோடு, பிறர் நலனையும் மனதில் இருத்தி, வெற்றி-தோல்வி மனப்பான்மை அற்ற பரந்த மனத்துடன், பிறருடன் பேச்சுவார்த்தை அல்லது பணியில் ஈடுபடும்போது, மனித உறவுகள் மேம்படவும், வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
  5. முதலில் புரிந்துகொள்; பிறகு புரிந்து கொள்ளப்பட நாட்டம் கொள்: முதலில் பிறர் சொல்வதை கவனமாகக் கேட்டு, பின்பு அவரிடம் உரையாடினால், செய்திப் பரிமாற்றம் நல்ல முறையில் நடந்து, இருவரும் பயன் பெறலாம்; உறவும் மேம்படும். 
  6. ஒருங்கிணைந்த, கூட்டு சக்தியாய் செயல்படு: பலர் இணையும்போது, வெறும் சேர்க்கையாக இன்றி, கூட்டு சக்தியாக, குழுமமாக செயல்பட்டால், பல மடங்கு பயன்களை அடையலாம்.
  7. உன்னை தினமும் புதுப்பித்துக்கொள்: தினமும் உடல், உள்ளம், உணர்வு, ஆன்மிக அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நாள் முழுவதும் சோர்வின்றி, உற்சாகத்தோடும், சக்தியோடும் செயலாற்ற முடியும்.
முதல் மூன்று பழக்கங்கள் (1,2,3) தனி மனித வெற்றிக்கானவை. 
அடுத்த மூன்று பழக்கங்கள் (4,5,6) ஒருவர் பொது வாழ்வில் வெற்றி பெறத் தேவையானவை. 
கடைசி பழக்கம் (7) அனைத்தையும் உள்ளடக்கி, இணைத்துச் செல்வதாகும்.
வாழ்வில் உயர்ச்சி அடைய, மேற்கூறிய ஏழு பழக்கங்களையும் கடைப்பிடிப்பது எளிதுதானே!
-ஏ.வி.ராமநாதன், மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்

Sunday 28 July 2013

பாலம்” கல்யாணசுந்தரம்

போற்றுவோம் பூச்செண்டால்..
(ஜி. வைத்தியநாதன் மின் அஞ்சல் செய்தியின் அடிப்படையில்)
“பாலம்” கல்யாணசுந்தரம்பெயர்: - பி. கல்யாண சுந்தரம் - “பாலம்” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம்.
பிறப்பு - ஆகஸ்ட், 1953 - மேலக்கரிவலக்குளம், திருநெல்வேலி.
குடும்பம்: பிரம்மசாரி. 

சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர். தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார்.


படிப்பு: கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம். லைப்ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.

வேலை: 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி, ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன்.
வேலையில் திறமை: லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார்.

இமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள்:

·         தமது சம்பளம் முழுவதையும் - ஆமாம் முழுவதையும் தான் - சமூக சேவைக்காக 35 வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தவர். தமது சொந்தச் செலவுக்குக் கூட தமது சம்பளத்தில் எந்த பகுதியையும் ஒதுக்காமல், முழுவதையும் சமூக சேவைக்காக அளித்தவர். தமது சொந்த செலவுக்கு, ஆபீஸ் வேலை முடிந்த பிறகு, ஹோட்டலில் சர்வர் பணி புரிந்த உத்தமர்.
·         பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 10 லட்சத்தையும் சமூகப் பணிக்கு அளித்தவர்.
·         தமது பூர்வீக வீட்டையும் தானமாக கொடுத்த தர்மவான்.

·         “பாலம்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். புயல் நிவாரண நிதியை மக்களிடம் பெற்று, அரசாங்கத்திடம் அளித்து, சேவை செய்கிறது அவரது அந்த நிறுவனம். எல்லை தாண்டியும் அது பணி ஆற்றுகிறது - ஆந்திரா, ஒரிசா, குஜராத் என்று “பாலம்” பாரத தேசத்தின் பல இடங்களிலும்  உதவுகிறது.

·         இந்தியா - சைனா யுத்தத்திற்கு காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
·         வேலையில் சேருவதற்கு முன்பு, விகடன் காரியாலத்திற்குச் சென்று, விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியனைப் பார்த்து, தம்மைப் பற்றி எழுத வேண்டினார். அவரைப் பார்த்து பால சுப்பிரமணியன், “நீங்கள் சம்பாதித்து, அதை சேவைக்கு அர்ப்பணித்து விட்டு வாருங்கள்’ என்று விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால், இதையே ஒரு உபதேசமாகக் கொண்டு. தொண்டு செய்யும் விதையை தம் உள்ளத்தில் ஊன்றி, வளர்த்துக் கொண்டார்.

·         தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை அவர் கூறக் கேட்போம்: “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.”

·         “பாலம்” கல்யாணசுந்தரத்தின் தியாகத்தை அறிந்த சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவரை தமது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.

“பாலம்” கல்யாணசுந்தரத்திற்குக் கிடைத்த பாராட்டுக்களின் பட்டியல்:

·         வேலையில் கிடைத்த சம்பாத்தியம் அனைத்தையும் சமூகப் பணிகளுக்கு அன்பளிப்பாக அளித்த உலகத்திலேயே முதல் நபர் என்ற தகுதிக்காக அமெரிக்க அரசாங்கம் “லட்சத்தில் ஒரு லட்சிய மனிதர்” - “விணீஸீ ஷீயீ tலீமீ விவீறீறீமீஸீவீuனீ” -  என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தது. அவர்கள் அளித்த ரூபாய் 30 கோடிகளையும் அப்படியே சமூகப் பணிக்கு அளித்து விட்டார்.

·         நமது இந்திய அரசாங்கம் - “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது.
·         “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.

·         உலக பயோக்கிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் - உலகத்தின் சிறந்த மனிதாபிமானி - என்று கௌரவித்தது.

·         ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
·         அமெரிக்க ஸ்தாபனம் ஒன்றும் - “லட்சத்தில் ஒருவர்” - என்ற பட்டம் கொடுத்துள்ளது.

அவர் சொல்லும் அறிவுரை:

“ஏதோ ஒரு விதத்தில், நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு உதவினால் தான், சமூகத்தை நீடித்து நீண்ட நாள் முன்னேற்றமடையச் செய்ய முடியும். யாரோ ஒருவர் ஒரு சிறிய அளவு சமூக சேவை செய்தாலும், சமூக மாற்றம் ஏற்படும் என்பது தான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை.”

அவரது நீண்ட காலத்திட்டங்கள்:

·         அனைவருக்கும் பயன்படும் தேசிய மின் லைப்ரரி அமைத்தல்.
·         அந்நிய நிதி பெற்று அகில உலக குழந்தைகளுக்கான பல்கலைக் கழகம் அமைத்தல்.

அவரது அழ்ந்து சிந்திக்க வைக்கும் பொன் மொழி: சரியான நபர் அமைந்தால் தான், எந்தக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
வீரம், செல்வம், கல்வி - என்ற அனைத்து வரங்களையும் அருளும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை விசேஷமாக ஆராதித்து வணங்கும் இந்த நவராத்திரி நல்நாளில் மனிதரில் மாணிக்கமாகத் திகழும் “பாலம்” கல்யாணசுந்திரத்தை வாய்மை பூச்செண்டு கொடுத்து வாசகர்களின் அனைவரின் சார்பில் பாராட்டுகிறது.
ஆதாரம் இந்து பத்திரிகைச் செய்தி

Monday 24 June 2013

தமிழின் 100 சிறந்த புத்தகங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் - பட்டியல்

தமிழில் சிறந்த 100 புத்தகங்கள் - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும்
8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை – மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை – மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை – கோணங்கி
47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
54)மோகமுள் – தி.ஜானகிராமன்
55)பிறகு – .பூமணி
56)நாய்கள் நகுலன்
57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி – சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் – கிருத்திகா
61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன்– கல்கி
65)கடல்புரத்தில் – வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67)சாயாவனம் சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
69)காகித மலர்கள் ஆதவன்
70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை – சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்
76)ம் – ஷோபாசக்தி
77)கூளமாதாரி – பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– . யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்
100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

சி.சரவணகார்த்திகேயன் பட்டியல்

தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம்.
திருக்குறள் - மு.வ. உரை
பட்டினத்தார் பாடல்கள்
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
கண்ணதாசன் கவிதைகள்
வைரமுத்து கவிதைகள்
சுந்தர ராமசாமி கவிதைகள்
கலாப்ரியா கவிதைகள்
கல்யாண்ஜி கவிதைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
லா.ச.ரா. சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
அ.முத்துலிங்கம் கதைகள்
ஜெயமோகன் சிறுகதைகள்
அம்பை சிறுகதைகள்
ஆதவன் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
ஜெயமோகன் குறுநாவல்கள்
சுஜாதாவின் நாடகங்கள்
சுஜாதாவின் மர்மக்கதைகள்
நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன்
விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா
ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா
பீக்கதைகள் - பெருமாள்முருகன்
விசும்பு - ஜெயமோகன்
என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
சித்தன் போக்கு - பிரபஞ்சன்
பொன்னியின் செல்வன் - கல்கி
ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
ஏழாவது உல‌கம் - ஜெயமோகன்
ராஸ‌லீலா - சாரு நிவேதிதா
பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ்கௌதமன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
கங்கணம் - பெருமாள்முருகன்
தேரோடும் வீதி - நீல.பத்மநாபன்
குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன்
காக்டெய்ல் - சுதேசமித்திரன்
அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - எம்.ஜி.சுரேஷ்
இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
ஆதலினாற் காதல் செய்வீர் - சுஜாதா
இனியெல்லாம் சுகமே - பாலகுமாரன்
கண்மணி கமலாவிற்கு... - புதுமைப்பித்தன்
சிந்தாநதி / பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்
ஆளுமைகள் விமர்சன‌ங்கள் - சுந்தர ராமசாமி
இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
நினைவோடை - சுந்தர ராமசாமி
அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்
கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
இலக்கிய முன்னோடிகள் வரிசை - ஜெயமோகன்
சு.ரா. நினைவின் நதியில் - ஜெயமோகன்
சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா
திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா
யாருக்கு யார் எழுதுவது? - இளையராஜா
ஓ பக்கங்கள் - ஞானி
தெருவோரக் குறிப்புகள் - பாமரன்
குமரி நில நீட்சி - சு.கி.ஜெயகரன்
சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் சுவாமிநாதன் & இளையபாரதி
கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 1அ, 2)
கவிதை மழை - கலைஞ‌ர் மு.கருணாநிதி
அவதார புருஷன் - வாலி
பாண்டவர் பூமி - வாலி
கிருஷ்ண விஜயம் - வாலி
காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - விக்ரமாதித்யன்
அகி - முகுந்த் நாகராஜன்
பித்தன் - அப்துல் ரகுமான்
கருவறை வாசனை - கனிமொழி
துப்பறியும் சாம்பு - தேவன்
வால்கள் - ராஜேந்திர குமார்
பாலகாண்டம் - நா.முத்துக்குமார்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
உயிர் - டாக்டர். நாராயணமூர்த்தி
உறவுகள் - டாக்டர் ருத்ரன்
பிரம்ம ரகசியம் - ர.சு. நல்லபெருமாள்
சத்திய சோதனை - மகாத்மா காந்தி
வாரணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப்பிள்ளை
நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
நூறு பேர் - மணவை முஸ்த‌ஃபா
பின்குறிப்புகள்:
இது முழுக்க முழுக்க கறாரான, என் சொந்த ரசனை சார்ந்த பட்டியல்.
புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அதன் தர வரிசைக்கிரமத்தைக் குறிப்பதல்ல.
இது முழுமையான அல்லது இறுதியான ஒரு பட்டியல் அல்ல. என்னிடம் இருந்தும், இன்னும் படிக்கப்படாமல் - ஆனால் இந்தப்பட்டியலில் சேரத் தகுதியுள்ளவையாய் நான் நம்பும் - சில புத்தகங்கள் உள்ளன (உதா: மௌனி சிறுகதைகள், பிரமிள் கவிதைகள், மு.தளையசிங்கம் படைப்புகள், புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம், ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா). என்னிடம் இல்லாமல், நான் படிக்காமலும் போன சில நல்ல புத்தகங்களும் உண்டு (உதா: ந.பிச்சமூர்த்தி கவிதைகள், ஆத்மநாம் கவிதைகள், இந்திரா பார்த்தசாரதி நாடக‌ங்கள், இரா.முருகன் சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்). மேலும் சில புத்தகங்கள், நான் படித்தும், என்னிடம் இல்லாததால், ஞாபகமறதியால் இதில் விடுபட்டிருக்கலாம். இந்தப் புத்தகக்காட்சிக்கு புதிதாய் வரும் புத்தகங்கள் சிலவும் இப்பட்டியலை மாற்றக்கூடும். எல்லாவற்றையும் விட, நூறு என்ற எண்ணிக்கை ஒருவகையில் tஷீஷீ sனீணீறீறீ; இன்னொரு வகையில் tஷீஷீ தீவீரீ.
லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஷ்க்ஷீவீtமீக்ஷீநீsளீ.நீஷீனீ/2009/01/100.லீtனீறீ

உலகின் முக்கிய 100 புத்தகம்,

உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழு உலகின் முக்கிய 50 புத்தகம், இந்திய அளவில் 25 தமிழில் 25 புத்தகங்களை தேர்வு செய்தது. அந்த புத்தகங்கள் 

1. போரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய் (ரஷ்யா)

2. தூங்கும் அழகிகள் இல்லம் - யசுனாரி கவாபட்டா (தமிழில் - லதா ராமகிருஷ்ணன்)

3.ஷோர்பா தி கிரிக் - நிக்கோஸ் கஸாந்த் சாக்கி

4. டேவிட் காப்பர் பீஃல்டு - சார்லஸ் டிக்கன்ஸ்


6. டைரி ஆஃப் எ மேட் மான் அண்ட் அதர் ஸ்டோரீஸ் . லூ.சூன்

7. குற்றமும் தண்டணையும் . பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

8. லீவ்ஸ் ஆஃப் கிராஸ் . வால்ட் விட்மன்

9. நேம் ஆஃப் த ரோஸ் . உம்பர்டோ ஈகோ

10. டாம் மாமாவின் குடிசை . எலிசபெத் பீரிச்சர் ஸ்டவ்

11. அமெரிக்க கறுப்பு அடிமையின் சுயசரிதை . பிரடெரிக் டக்ளஸ்

12. தி பாமிஷ்டு ரோடு . பென் ஓக்ரி

13. ஸோஃபிஸ் சாய்ஸ் . வில்லியம் ஸ்டைரன்

14. லே மிசரபில்ஸ் . விக்டர் ஹூகோ

15. பிளைண்ட்னஸ் . ஜோஸ் சரமாகோ

16. கில்காமெஷ் . 

17. தி அன் பியரபிள் லைன்ஸ் ஆஃப் பீயிங்

18. கிழவனும் கடலும் . எர்னஸ்ட் ஹெம்மிங்வே ( காலச்சுவடு )

19. தேர்ந்தெடுத்த கதைகள் . ஆண்டன் செகாவ் . 

20. தி டின் டிரம் . குந்தர் கிராஸ்

21. தேர்ந்தெடுத்த படைப்புகள் . ஜோர்ஜ் லூயி போர்ஹேஸ்

22. ஒரு நூற்றாண்டுத் தனிமை . கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

23. வெயிட்டிங் ஃபார் கொடாட் . சாமுவேல் பெக்கட்

24. தி நீக்ரோ ஸ்பீக்ஸ் ஆஃப் த ரிவர்ஸ் . லாங்ஸ்டன் ஹூஸ்

25. மிட் நைட் சில்ரன்ஸ் . சல்மான் ருஷ்டி

26. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிராண்ட் . எரிக் மரியா ரிமார்க்

27. டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் . ஆர்தர் மில்லர்

28. சித்தார்த்தா . ஹேர்மன் ஹஸ்ஸே

29. அந்நியன் . ஆல்பர்ட் காம்யு (க்ரியா வெளியீடு)

30. தி பிளைண்டிங் ஆப்சென்ஸ் ஆஃப் லைட் . தெஹர் பென் ஜெலோன்

31. உருமாற்றம் . பிராங்க் காஃப்கோ

32. தி பிரதர்ஸ் கரமாசோவ் . பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி

33. ஹேர் சாக் . சால் பெல்லோ

34. தாய் . மாக்சிம் கார்க்கி

35. வீரம் விளைந்தது . நிக்கோலாய் ஆஸ்ட்ரோவ்ஸ்கி

36. திங்ஸ் ஃபால் அப்பார்ட் . சினுவா ஆச்சபி

37. தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஸன் . வில் டுராண்ட் & ஏரியல் டுராண்ட்

38. இருபது காதல் கவிதைகளும் ஒரு துயரப்பாடலும் . பாப்லோ நெருதா

39. ருபியாத் . உமர் கய்யாம்

40. தி பிளாக் பியூட்டி . அன்னா செவல்

41. பில்க்ரிம்ஸ்  பிராக்ரஸ் . ஜான் பன்யான்

42. டைம் மெஷின் . ஹெச்.ஜி.வெல்ஸ்

43. மார்க்கோ போலோவின் பயணங்கள் . மார்க்கோ போலோ

44. கலிவரின் பயணங்கள் . ஜொனதன் ஷிப்ட்

45. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் . ஸ்டீபன் ஹாக்கிங்

46. தி நேக்கட் ஏப் . டெஸ்மண்ட் மாரிஸ்

47. ஒற்றை வைக்கோல் புரட்சி . மசனோபு ஃபுக்குயோகா (தமிழில் பூவுலகில் நண்பர்கள் : வம்சி)

48. இருப்பும் வெறுமையும் . ஜீன் பால் சார்த்தர்

49. உயிரினங்களின் தோற்றம் . சர் சார்லஸ் டார்வின்

50. என் வாழ்க்கை கதை . ஹெலன் கெல்லர் 

51. அற்புத உலகில் ஆலிஸ் . லூயிஸ் கரோல் (விஜயா பதிப்பகம் )

52. என் சரித்திரம் . உ.வே.சாமிநாதையர்

53. என் கதை . நாமக்கல் கவிஞர்

54. பிரதாப முதலியார் சரித்திரம் . வேதநாயகம் பிள்ளை

55. மோகமுள் . தி.ஜானகிராமன்

56. ஒரு புளியமரத்தின் கதை . சுந்தர ராமசாமி

57. சீவன் கந்தர்வன் கதை . தமிழில் ச.தமிழ்செல்வன்

57. புதுமைப்பித்தன் கதைகள்

58. கடல்புரத்தில் . வண்ணநிலவன்

59. இன்குலாப் கவிதைகள்

60. கு.அழகிரிசாமி சிறுகதைகள்

61. கரைந்த நிழல்கள் . அசோகமித்ரன்

62. புயலிலே ஒரு தோணி . ப.சிங்காரம்

63. சாயாவனம் . சா.கந்தசாமி

64. வானம் வசப்படும் . பிரபஞ்சன்

65. கலைக்க முடியாத ஒப்பனைகள் . வண்ணதாசன்

66. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் . ஜெயகாந்தன்

67. கோபல்ல கிராமம் . கி.ராஜநாராயணன்

68. அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு . துபாஷி அனந்தரங்கம் பிள்ளை

69. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு . வெ.சாமிநாத சர்மா

70. பாலும் பாவையும் . விந்தன்

71. தாகம் . கு.சின்னப்ப பாரதி

72. புத்தம் வீடு . ஹெப்சியா ஜேசுதாசன்

73. சத்திய சோதனை . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

74. கீதாஞ்சலி . ரவீந்திரநாத் தாகூர்

75. தேவதாஸ் . சரத் சந்திர சட்டோபாத்யாயா (தமிழில் புவனா நடராஜன், காலச்சுவடு)

76. ஆனந்தமடம் . பங்கிம் சந்திர சட்டர்ஜி

77. ஆரோக்கிய நிகேதனம் . தாராசங்கர் பந்தோபாத்யாயா

78. ஈ.வெ.ராமசாமி என்கிற நான் . தந்தை பெரியார்

79. வாடிவாசல் . சி.சு.செல்லப்பா

80. விடியுமா . கு.ப.ராஜகோபாலன்

81. கோதான் . பிரேம்சந்த்

82. நீலகண்ட பறவையைத் தேடி . அதீன் பந்தோபாத்யாயா

83. பதேர்பாஞ்சாலி, விபூதி பூஷண் பந்தோபாத்யாயா

84. பத்மா நதி மஜ்கீ, மாணிக் பந்தோபாத்யாயா

85. கண்டுணர்ந்த இந்தியா, ஜவகர்லால் நேரு

86. அக்னி நதி, குரதுலைன் அய்தர்

87. குவில்ட் அண்ட் அதர் ஸ்டோரிஸ், இஸ்மத் சுக்தாய்

88. யாயாதி, வி.எஸ். காண்டேகர்

89. மண்ணும் மனிதரும், சிவராம கரந்த்

90. செம்மீன், தகழி சிவசங்கரப் பிள்ளை

91. அசுரவித்து, எம்.டி.வாசுதேவன் நாயர்

92. என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, வைக்கம் முகமது பஷீர்

93. நீங்கள் என்னைகம்யூனிஸ்ட் ஆக்கினீர், தோப்பில் பாசி

94. குசும பாலே, தேவனூறு மகாதேவ

95. வால்காவிலிருந்து கங்கைவரை, ராகுல சாங்கிருத்தியாயன்

96. மலையிடையே ஒரு பாலம், குவேம்பு

97. தி கைடு, ஆர்.கே.நாராயணன்

98. பாகிதான் போகும் ரயில், குஷ்வந்த் சிங்

99. தீண்டாதான், முல்க்ராஜ் ஆனந்த்

100. தர்பாரி ராகம், லால் சுக்லா

Thursday 20 June 2013

விவேகானந்தர் பொன்மொழிகள்


  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
  • மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
  • பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
  • காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
  • உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
  • நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
  • சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
  • மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
  • நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
  • குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.
  • செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
  • நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
  • மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
  • மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
  • இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
  • மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.
  • மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.
  • கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.
  • தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
  • பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.
  • உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.
  • இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
  • நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
  • உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
  • செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.
  • முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.
  • பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
  • நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
  • இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
  • அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
  • எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.
  • எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
  • யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
  • குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.
  • சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
  • போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
  • இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
  • பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.
  • நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
  • நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.
  • பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.
  • கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
  • பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.
  • ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.
  • ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
  • இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
  • மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
  • பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
  • ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
  • நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
  • ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
  • உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
  • எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
  • பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
  • விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
  • கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
  • ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
  • ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
  • நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
  • எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.
  • இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.
  • இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.
  • மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.
  • வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
  • மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
  • நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
  • பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.
  • நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.
  • நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.
  • பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
  • எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
  • வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
  • கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.
  • சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
  • அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
  • துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
  • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
  • வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
  • தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.
  • இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
  • நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.
  • எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
  • மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.
  • இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
  • எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.
  • --
விவேகானந்தர்

Monday 13 May 2013

சம்பங்கிப் பூக்கள் - சா.மரியரீகன் (கவிதை)


சம்பங்கிப் பூக்கள் - சா.மரியரீகன் (கவிதை)
                      நண்பர் சா.மரியரீகன் எனக்கு பச்சையப்பன் கல்லூரியிலிருந்தே பழக்கம். தீவிர வாசக அனுபவம் மிக்கவர். அவரது இக்கவிதை தொகுப்பு எல்லோர் கையிலும் தவழ்ந்து சமுதாயம் மலர்ச்சியடைய விரும்புகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...